நாளை கன்னியாகுமரி கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் ஜெயலலிதா
பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அருமனை செல்கிறார்.
இதற்காக அருமனையில் சிறப்பு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது.
கிருஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு விட்டு ஜெயலலிதா நாளை இரவே சென்னைக்கு திரும்புகிறார்.
தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் மாற்றம்:
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பில் இருக்கும் பி.கிருஷ்ணன், செயலாளர் பொறுப்பில் இருக்கும் குப்புசாமி ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார். தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி மாவட்ட துணை தலைவராக பி.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக டி.ஆர். அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.வி. ராஜேந்திரன் ஆகியோரும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி நியமிக்கப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் சி.வி. ராஜேந்திரன் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.