For Daily Alerts
Just In
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். நினைவு நாள்-சமாதியில் ஜெ. அஞ்சலி
சென்னை: அதிமுகவை தோற்றுவித்தவரும், தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 23வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.
எம்.ஜி.ஆர். நினைவு தினம் இன்று. இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின் பக்தர்கள், அதிமுகவினர், அனுதாபிகள் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்தும், படங்களுக்கு மாலை அணிவித்தும் நினைவு கூர்ந்தனர்.
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வணங்கினார். பின்னர் உறுதிமொழி ஏற்பும் நடந்தது.
Comments
English summary
ADMK founder and former Chief Minister M.G.Ramachandran remebered on his 23rd death anniversary today. In Chennai ADMK chief Jayalalitha garlanded and payed her tribute in MGR memorial. ADMK cadres and MGR supporters also garlanded the late leader"s statues all over Tamil Nadu.
Story first published: Friday, December 24, 2010, 12:59 [IST]