பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 45 பேர் பலி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பஜாவோர் மாகாணம் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இது தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. அங்குள்ள ஹார் என்ற இடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வினியோக மையம் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை உணவு பொருள் வினியோகம் நடந்தது. அவற்றை பெறுவதற்காக ஏராளமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதனால் அப்பகுதி அதிர்ந்து தீப்பிடித்து எரிந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கு மிங்கும் ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அங்கு கூடியிருந்த 45 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனை வரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குலை தற்கொலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு பெண் மூலம் இதை அவர்கள் நிகழ்த்தியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது போன்ற தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள்தான் நடத்துவார்கள்.
ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications