சுரேஷ் கல்மாடிக்கு வந்த மிரட்டல் கடிதம்-சிபிஐ ரெய்டில் சிக்கியது

சமீபத்தில் காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் வீடுகள், அலுவலகங்களில், சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. டெல்லி, புனே, மும்பை நகரங்களில் இந்த ரெய்டு நடந்தது.
அப்போது பல முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. அதில் ஒன்று மிரட்டல் கடிதம். கல்மாடியை மிரட்டி எழுதப்பட்டது அது. அதில், கல்மாடி தொடர்பான மோசமான தகவல் அடங்கிய சிடியை ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ. 4 கோடி தர வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த கடிதம் குறித்து கல்மாடி திருப்திகரமான விளக்கத்தைத் தரவில்லை என்பதால் கடிதத்தின் பின்னணி, அந்த மோசமான தகவல் என்ன என்பது குறித்து சிபிஐ தீவிரமாக ஆராய ஆரம்பி்த்துள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தை தடவியல் சோதனைக்கும் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கல்மாடி மிரட்டப்பட்ட சம்பவமும், ஏன் அவர் மிரட்டப்பட்டார் என்பதும் பெரும் புதிராக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications