நெல்லை-வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் கடும் உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதில் தக்காளி, வெங்காயம் உள்பட பல செடிகள் அழுகி சேதம் அடைந்தன. இதனால் விளைச்சல் குறைந்து விட்டது. இதில் வெங்காயம் விலை கிடு கிடு வென உயர்ந்து கிலோ ரூ.100 வரை சில்லரை கடைகளில் விற்கப்பட்டது.
மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு மளமளவென வெங்காய விலை குறைய தொடங்கியது. இதனால் வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ரூ.40 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் இன்று ரூ.35க்கு விற்கப்பட்டது.
ஆங்காங்கே உள்ள சில்லரை கடைகளில் அவர்கள் விருப்பபடி விலை வைத்து விற்கிறார்கள். இந்த நிலையில், வெங்காய விலையில் இருந்து மீண்ட மக்களுக்கு இப்போது தக்காளி விலை உயர்வு அதிரிச்சியை கொடுத்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி ரூ.2, 3 கூடி கொண்டே வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.30ல் இருந்து ரூ.34 வரை விற்ற தக்காளி நேற்று சில்லரை கடைகளில் கிலோ ரூ.40க்கு விற்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே தக்காளிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் ரோட்டோரத்தில் குவித்து மாடுகளுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications