ஸ்பெக்ட்ரம் விவகாரம்-பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு ஆஜராகி கணக்கு தணிக்கை அதிகாரி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

CAG Vinod Rai
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக எப்படி கணக்கிடப்பட்டது என்பது குறித்து இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு கமிட்டி முன்பு மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

பாஜக எம்.பி. முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான கமிட்டி கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை குறித்து விசாரித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது எப்படி என்பதை நேரில் வந்து விளக்குமாறு வினோத் ராய்க்கு அது உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று நேரில் ஆஜரானார் வினோத் ராய்.

கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த அறிக்கைதான் தேசியஅளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கிப் போட்டன. இதையடுத்து கடும்நெருக்குதல் முற்றியதைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா பதவி விலக நேரிட்டது.

இதையடுத்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடைபெற வேண்டும் என பாஜக போர்க்கொடி உயர்த்தியது. ஆனால் மத்திய அரசோ அதை நிராகரித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி விசாரணையே போதுமானது. அக்கமிட்டியின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிதானே இருக்கிறார். பிறகு ஏன் அதை ஏற்க பாஜக மறுக்கிறது என்று கேட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு பொதுக் கணக்குக் கமிட்டி உத்தரவிட்டது. அதை ஏற்று இன்று காலை வினோத் ராய் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+