இறந்த குழந்தையை புதைக்க பணமில்லை-குப்பைத் தொட்டியில் போட்ட சென்னை தாய்
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் குப்பை பொறுக்கும் பெண் தனது இறந்த குழந்தையைப் புதைக்க பணமில்லாததால் குப்பைத் தொட்டியில் போட்டுட் சென்றுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் பழையக்காரன் தெருவைச் சேர்ந்வர் ஆர். நிர்மலா. குப்பை பொறுக்கும் தொழிலாளி. அவருக்கு 2 வயது பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தை கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை உயிர் இழந்தது.
நிர்மலாவுக்கு தனது குழந்தைக்கு இறுதி சடங்குகள் நடத்த பண வசதியில்லை. பிறரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. அதனால் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தனது குழந்தையின் உடலைப் போட்டார்.
கோடம்பாக்கத்தில் உள்ள கோபால மேனன் தெருவில் குடியிருப்பவர்கள் குப்பைத் தொட்டியில் குழந்தையின் உடல் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் இந்த உண்மை தெரிய வந்தது.