ஸ்பெக்டரம் ஊழல் இல்லை, வெறும் வதந்தி-காதர் முகைதீன் கருத்து
நெல்லை: ஸ்பெக்டரம் ஊழல் இல்லை. அது யூகத்தின் அடிப்படையில் பரப்பபடும் வதந்தியாகும். இதனால் வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் வராது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தமிழகம் முழுவதும் 10 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முடிவு செய்யதுள்ளோம்.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் இது வரை 85 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களைச் சேர்த்த நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சியின் நிறுவன நாளான மார்ச் 10-ம் தேதி பரிசு வழங்கப்படும்.
தி.மு.க.வும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கொள்கை ரீதியாக ஒற்றுமை உள்ள கட்சிகள் என்பதால் இரு கட்சிகளின் உறவும் நிலையாக உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம். தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளா ஜெயலலிதா சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக இருந்தேன் என்று கூறுவது முரண்பாடான கருத்தாகும். அவர் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், அவர்களுடைய மனது புண்படும்படியும் நடந்து கொண்டார். அதை விட தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தவரே ஜெயலலிதா தான். இந்த சட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த பிறகே அவசர சட்டத்தில் அதை ரத்து செய்தார்.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தான், மதமாற்ற தடை சட்டத்தை சட்டமன்றத்தை கூட்டி தீர்மானமாகக் கொண்டு வந்து முறையாக ரத்து செய்தவர். மேலும், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவரும் கருணாநிதி தான்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கையின்படி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு ஜெயலலிதா குரல் கொடுக்கவில்லை. பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியவர் அவர்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் பொதுகணக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளதால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை.
ஸ்பெக்டரம் ஊழல் இல்லை. அது யூகத்தின் அடிப்படையில் பேசப்படும் வதந்தியாகும். இதனால் வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications