ஈரான் முன்னாள் மன்னரின் இளைய மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மறைந்த ஈரான் ஷாவின் (மன்னர்) இளைய மகன் இளவரச் அலி ரெசா பஹ்லவி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள தனது வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

44 வயதான அலி-ரெசா பஹ்லவி பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். நேற்று காலை அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மூத்த சகோதரர் இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.

ரெசாவுக்கு தாயார் பரா பஹ்லவி, அண்ணன் ரெசா, சகோதரி பரானாஸ் ஆகியோர் உள்ளனர்.

இளவரசர் அலி 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி டெஹ்ரானில் பிறந்தார். அவர் 1979-ம் ஆண்டு நடந்த ஈரான் புரட்சிக்குப் பின் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார்.

அவர் கடந்த 1984-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.வும், 1992-ம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+