தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு: ஜி. ராமகிருஷ்ணன் அறிவிப்பு
திண்டுக்கல் : தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறி்த்து முடிவு செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பும் ஒரு வகை ஊழல் தான்.
மக்கள் நலன் கருதி இலவச கலர் டி.வி, உர மானியம், ஒரு கிலோ அரிசி ஆகியவை கொடுக்கும் போது அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது ஊழலாகுமா என தி.மு.க-திமுகவினர் பிரசாரம் செய்கிறார்கள். இது பொய் பிரச்சாராமாகும்.
இந்தியாவில் இது வரை நடந்திராத ஊழல் இது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை காப்பாற்ற தி.மு.க தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. விரைவில் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து சிபிம் விவாதிக்கும்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 3 லட்சம் பேருக்குத் தான் இந்தாண்டு வீடு வழங்கப்பட உள்ளது. ஆனால் 21 லட்சம் பேருக்கு திமுகவினர் அடையாள அட்டை வழங்கி வருகின்றனர்.
தேர்தலின் போது மக்கள் தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அடுத்த ஆண்டு வீடு கட்டுவதற்கு இந்தாண்டே அடையாள அட்டையை தி.மு.க-வினர் வழங்கி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதாகும்.
தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அதிவும் மாநிலக்குழு கூடி இறுதி முடிவெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications