காய்கறி மாலை, கருப்புச் சட்டை, கருப்பு சால்வையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: சட்டசபை கூடிய முதல் நாளான இன்று கருப்புச் சட்டையுடன், காய்கறி மாலைகள் அணிந்து வந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் சுர்ஜித் சி்ங் பர்னாலாவின் உரையுடன் இன்று தொடங்கியது.
அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து கருப்புச் சட்டையுடன் வந்திருந்தனர்.
காய்கறி மாலைகள் அணிந்தும், கருப்பு சால்வை அணிந்தும் அவர்கள் வந்திருந்தனர்.
ஆளுநர் உரையாற்றத் தொடங்கியபோது அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து பேசத் தொடங்கினர். இதையடுத்து ஆளுநர் உரையாற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது அதிமுக உறுப்பினர்கள் சிலர் அவைக் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications