திருச்செந்தூர்: நடுக்கடலில் கப்பல்-விசைப்படகு மோதல்: படகில் இருந்தவர்கள் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடலில் கப்பல் மோதியதில் விசைப் படகு சேதமடைந்தது. அந்த படகில் இருந்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்து கொண்டு திரும்பும்போது கரையில் இருந்து சுமார் 17 கிமீ தூரத்தில் விசைப் படகு ஒன்று உடைத்து கிடைப்பதை பார்த்தனர். விசைப் படகின் உடைந்த பகுதி, கேஸ் சிலிண்டர்கள், டீசல் கேன்கள், 5 லிட்டர் பாமாயில் போன்றவைகளை கரைக்கு எடுத்து வந்தனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், கடலில் கிடந்த பலகையில் மலையாளம் மற்றும் ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. இந்த விசைப் படகு குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். உடைந்த பாகங்களை பார்ககும்போது கப்பல் மோதி விசைப் படகு உடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. விசைப் படகில் இருந்தவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை என்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+