எம்.ஜி.ஆர். பிறந்த நாள் 4 நாட்கள் கொண்டாடப்படும்: ஜெ. அறிவிப்பு
மதுரை: அதிமுக நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 94-வது பிறந்த நாள் வரும் 17-ம் தேதி வருகிறது. எனவே, அவரது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் கழக அன்டை மாநிலங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.
அந்த 4 நாட்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக் கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய இடங்களில் 17-ம் தேதி அன்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications