டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீதான ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமியின் புகார் சரியானதே, ஏற்கக் கூடியதே. அதேசமயம், அவர் புகார்தாரராகவும், அரசுத் தரப்பு வக்கீலாகவும் ஒரே நேரத்தில் அவர் செயல்பட முடியாது என்று டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட் தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசாவை விசாரிக்க அனுமதிக்கக் கோரி சாமி டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், தன்னை அரசுத் தரப்பு வக்கீலாக சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பிரதீப் சட்டா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், என்னைப் பொறுத்தவரை சாமியின் மனு சரியானதே, விசாரணைக்கு ஏற்கப்படக் கூடியதே. சாமி கூறியுள்ள புகாரும் சரியானதாகவே தெரிகிறது.
இருப்பினும் அவர் முதலில் புகார்தாரராக இருக்க வேண்டும். பிறகுதான் அவரை அரசு வக்கீலாக சேர்ப்பதா, இல்லையா என்பது குறித்து பரிசீலிக்க முடியும். ஒரே நேரத்தில் இரு வேலைகளையும் அவர் செய்ய முடியாது என்றார்.
அப்போது சாமி எழுந்து, நான் முதலில் புகார்தாரராக மட்டுமே செயல்பட விரும்புகிரேன். அதன் பிறகே அரசுத் தரப்புக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
A Delhi court today held as "maintainable" a private complaint filed by Janata Party chief Subramanian Swamy seeking prosecution of former Telecom Minister A Raja in the 2G spectrum case. "I am of the opinion that complaint as such is maintainable," Special CBI Judge Pradeep Chaddah said. The court said that first of all Swamy will have to depose as a complainant in the case and then only his plea, seeking appointment as a deemed public prosecutor, could be decided. Then Swamy said replied that, "I am not seeking the dual role. I will first testify as a complainant and then would like to assist this court in prosecuting the accused in the massive scam''