1811-ம் ஆண்டு கடலில் மூழ்கிய அமெரிக்க போர்க்கப்பல் கண்டுபிடிப்பு
புரோவிடென்ஸ்: கடந்த 1811-ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த பாட்டில் ஆப் லேக் ஈரியின் போது ரோட் தீவில் மூழ்கிய அமெரிக்க போர் கப்பலை கனக்டிகட்டைச் சேர்ந்த 3 ஆழ்கடற் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சார்லஸ் பப்பன், கிரெய்க் ஹார்கர், மைக் போர்னியர் ஆகிய 3 பேர் கடல்வாழ் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த ரோட் தீவில் மூழ்கிய யுஎஸ்எஸ் ரிவென்ஜ் என்னும் போர் கப்பலில் இருந்து 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 பீரங்கிகள் எடு்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அந்த கப்பல் புயலால் மூழ்கியது. அடுத்து அவர்கள் கடலுக்குச் சென்றபோது மேலும் நான்கு 42 இஞ்ச் நீள பீரங்கிகள், ஒரு நங்கூரம் உள்ளிட்ட சில பொருட்களை எடுத்து வந்தனர். இந்த கப்பல் மூழ்கி நேற்றுடன் 200 ஆண்டுகள் நிறைவடைந்தன.
கடந்த 1811-ம் ஆண்டு அமெரிக்காவுக்கம், இங்கிலாந்துக்கும் இடையே பாட்டில் ஆப் லேக் ஈரீ என்னும் போர் நடந்தது. அப்போது ரிவென்ஜ் கப்பலுக்கு கடற்படை ஹீரோவான ஆலிவர் ஹசார்டு பெர்ரி தலைமை தாங்கி வழி நடத்தினார். அந்த கப்பல் ரோட் தீவில் மூழ்கியது. 2 ஆண்டுகள் நடந்த இந்த போரில் 1813-ம் ஆண்டு அமெரிக்கா வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications