தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
சென்னை தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள 16 சட்டசபைத் தொகுதிகளில் மொத்தம் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டுள்ளது. 2011 ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் தொகுதி மறு சீரமைப்பின்படி திருத்தப்பட்ட புதிய தொகுதிகளாகும்.
சென்னையில் 30 லட்சம் வாக்காளர்கள்:
தலைநகர் சென்னையில் தற்போது 16 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 30,23,900 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 15,14,037. பெண்கள் 15,9,571 ஆவர். இவர்கள் தவிர திருநங்கைகளின் எண்ணிக்கை 292 ஆகும்.
பெரம்பூர் தொகுதியில்தான் அதிக அளவிலான வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 2,20,654 பேர் உள்ளனர். ஆண்கள்தான் அதிகம், அவர்களின் எண்ணிக்கை 1,10,653 பேராகும். பெண்களின் எண்ணிக்கை 1,09,993 பேராகும். 2வது பெரிய தொகுதியாக, வேளச்சேரி தொகுதியில், 2,17,026 பேர் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தாலோ, சேர்த்தல், நீக்கல் செய்ய வேண்டி இருந்தாலோ மீண்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மண்டல அலுவலகங்களில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 19 லட்சம் வாக்காளர்கள்:
மதுரை மாட்டத்தில் 10 சட்டசபைத் தொகுதிகளில் 19 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியான வரைவுப் பட்டியலில் 19,25,126 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதில் பெயர்களைச் சேர்க்க 63,565 மனுக்கள் பெறப்பட்டு அதில் 56,243 மனுக்கள் ஏற்கப்பட்டன. நீக்கல் மனுக்கள் 282 பெறப்பட்டு அதில் 148 மனுக்கள் ஏற்கப்பட்டன. துணைப்பட்டியலில் 28,725 ஆண் வாக்காளர்களும், 27,518 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 56,243 வாக்காளர்கள் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications