பாளை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு-மாஜிஸ்திரேட் விசாரணை
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி இறந்தது தொடர்பாக கைதிகள், சிறை காவலர்களிடம் நேற்று மாஜிஸ்திரேட் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
குமரி மாவட்டம் கல்குளம் அருகேயுள்ள வீரவிலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற ஆசி. ஆயுள்தண்டனை கைதியான அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை அவர் மீது போர்வையை போர்த்தி கைதிகள் சிலர் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை சிறை காவலர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியன் வழியிலேயே இறந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பிரமணியன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்சிறையில் உள்ள கைதிகள் 500 பேர் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு சிறைக்கு வந்த மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணா சிறை காவலர்கள், கைதிகள் மற்றும் இறந்த கைதியின் உறவினர்களிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அப்போது கைதிகள் டாக்டர் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் கைதிகளை சமாதானப்படுத்தினார்.
இதனால் கைதிகள் நேற்று மதியம் உணவை சாப்பிட்டனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சுப்பிரமணியன் சாவு குறித்து உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications