திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டது. 14ம் தேதி போகியும், 15ம் தேதி தைப் பொங்கலும், 16ம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போக பார்கள், கிளப்களில் உள்ள மது பார்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications