கரூரில் பிரபல ஹோட்டல்களில் போலீஸ் துணையுடன் மீண்டும் சூதாட்டம்
கரூர்: கரூரில் உள்ள பிரபல ஹோட்டல்களில் போலீசார் உதவியுடன் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு (அதிமுக ஆட்சி) சூதாட்ட கிளப் நடத்தியதாக கூறி அன்றைய அதிமுக மாவட்டச் செயலாளர் கு. வடிவேல், மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர், இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கரூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய ராமராஜன் ஆகியோரை ஜெயலலிதா சஸ்பெண்ட் செய்தார்.
இதையடு்த்து வந்த அதிமுக நிர்வாகிளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் தங்களது வேலையை காப்பாற்றிக் கொள்ள சூதாட்ட கிளப்பை தடை செய்தனர். இதனால் கடந்த பல வருடங்களாக சூதாட்ட கிளப் செயல்படவில்லை.
இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்ட எஸ்பி -யாக மகேஸ்வரி பொறுப்பேற்றுளளார். அவருக்கு தெரியாமல் அவரின் கீழ் பணி புரியும் சில உயர் அதிகாரிகள் உதவியுடன் கரூர் மாவட்டத்தில் உளள பிரபல ஹோட்டல்களில் சூதாட்டம் இரவு பகலாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இதை தடுக்க திருச்சி டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications