மைனருடன் உறவு : இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி மீது கற்பழிப்பு வழக்கு

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (74) மீது ஏற்கனவே வரி ஏய்ப்பு, ஊழல் புகார்கள் உள்ளன. மேலும் இரவு நேர விருந்து வைத்து இளம் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அவர் மொராக்கோவைச் சேர்ந்த 17 வயது கரிமா எல் மக்ரக் உடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அன்மையில் அந்த பெண் ஒரு திருட்டு வழக்கில் கைதானார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் இந்த உண்மை தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண் கூறியதாவது, பிரதமர் பெர்லஸ்கோனி ஏற்பாடு செய்திருந்த காதலர்கள் தின விருந்தில் நான் கலந்து கொண்டேன். அந்த விருந்திற்கு வந்ததற்காக அவர் எனக்கு பணம் கொடுத்தார். கடந்த ஆண்டு மிலனில் உள்ள அவரது வில்லாவில் நடந்த விருந்துக்கு என்னை அழைத்தபோது அவருக்கு நான் மைனர் என்பதே தெரியாது. ஏனென்றால் நான் அனைவரிடமும் எனக்கு 24 வயது என்று தான் சொல்வது வழக்கம் என்றார்.
மிலன் வழக்கறிஞர்கள் பெர்லஸ்கோனி மொராக்கோவைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் உறவு வைத்துக கொண்டு பணம் கொடுத்தாரா?, அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த விஷயத்தை மூடி மறைக்க முயன்றாரா? அந்த பெண்ணை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாரா ? என்று விசாரித்து வருகின்றனர்.
இத்தாலியில் மைனர் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டவிரோதமான செயலாகும். இதையடுத்து அவர் மீது விபச்சார வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்தரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறி்த்து பெர்லஸ்கோனியிடம் கேட்டதற்கு, இது விசித்திரமான, நம்பமுடியாத குற்றச்சாட்டு என்று கூறினார். மேலும், தனது விருந்துகளில் எந்த சட்டவிரோதச் செயல்களும் நடப்பதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications