சபரிமலை விபத்து சதி வேலையா?-உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பத்தினம்திட்டா: சபரிமலையில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 109 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று கேரள காவல்துறை சந்தேகிக்கிறது. இதையடுத்து இதுகுறித்து உளவுத்துறை விசாரணைக்கு கேரள மாநில டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை புல்மேடு பகுதியில் மகர ஜோதி தரிசனம் முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் ஏற்படுவதற்கு ஒரு ஜீப்தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் அந்த ஜீப்பை எடுக்க டிரைவரோ, உரிமையாளரோ வரவில்லை.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த ஜீப் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹாஜி என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. ஆனால் இப்போதும் அவர்தான் அந்த ஜீப்பின் உரிமையாளரா என்பது குறித்து விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து விசாரித்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள உளவுத்துறைக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+