தற்கொலையில் தமிழகம் 3வது இடம்: மேற்கு வங்கம் முதலிடம்

2008-ம் ஆண்டைவிட 2009-ல் தற்கொலை 1.7 சதவிகிதமும், சாலை விபத்துகள் 7.3 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 151 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். மேலும் 3,57,021 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 223 ஆண்களும், 125 பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் தற்கொலை செய்து கொள்ளும் 125 பெண்களில் 69 பேர் இல்லத்தரசிகள். ஒரு நாளில் 73 பேர் உடல் நலக்குறைவாலும், 10 பேர் காதல் விவகாரத்தாலும் தற்கொலை செய்து கொள்வதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
முதலிடத்தில் மேற்கு வங்கம்-2வது இடம் ஆந்திரா
தற்கொலையில் 14 ஆயிரத்து 648 பேருடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. 14 ஆயிரத்து 500 பேருடன் ஆந்திரா இரண்டாவது இடத்திலும், 14 ஆயிரத்து 424 பேருடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும், 14 ஆயிரத்து 300 பேருடன் மகாராஷ்டிராவும், 12 ஆயிரத்து 195 பேருடன் கர்நாடகமும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.
வழக்கமாத தற்கொலையில் கேரளா முன்னணியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் பட்டியலில் மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகியவை முதலிடத்திற்கு வந்துள்ளன.
நாட்டில் நடக்கும் மொத்த தற்கொலைகளில் மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு 55.1 சதவிகிதமாகும்.
2009ல் டெல்லியில் ஆயிரத்து 477 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்த தற்கொலையில் உத்தர பிரதேசத்தின் பங்கு 3.3 சதவிகிதம். 2009ல் மஹாராஷ்டிரா(2,872), ஆந்திரா (2,414), கர்நாடகா(2,282), சட்டீஸ்கர்(1,802), மத்திய பிரதேசம்(1,395) ஆகிய 5 மாநிலங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கு இந்த 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். கடந்த 2009-ம் ஆண்டில் மொத்தம் 17 ஆயிரத்து 368 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது 2008-ம் ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகம் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளாக மஹாராஷ்டிராவில் தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட 512 பேரில் இருந்து அதிகரித்து 2009ல் ஆயிரத்து அறுபது விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர்.
பீகார் (112), ஒரிசா (154) மற்றும் ஜாக்க்கண்டில் (164) குறைந்த பேர் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் தற்கொலை காரணங்களில் 23. 7 சதவிகிதத்துடன் குடும்ப பிரச்சனை முதலிடத்திலும், 21 சதவிகிதத்துடன் உடல்நலக்குறைவு இரண்டாவது இடத்திலும் உள்ளது.
சமுதாய மற்றும் பொருளாதாரக் காரணங்களால் ஆண்களும், தனிப்பட்ட மற்றும் உணர்ச்சி காரணங்களால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2009ல் வேலையின்மையால் 18.8 சதவிகிதத்தினரும், வேலை பிரச்சனை காரணமாக 15.1 சதவிகிதத்தினரும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்
35 பெரு நகரங்களில் நடந்த தற்கொலையில் பெங்களூர் (2,167), சென்னை (1,412), டெல்லி (1,215) மற்றும் மும்பையில் (1,051) 43. 3 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர்.
புனேவில் தான் விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்துகளை பொருத்தவரையில் சாலை விபத்தில் 37.9 சதவிகிதத்தினரும், விஷத்தால் 8 சதவிகிதத்தினரும், ரயில் விபத்துகளில் 7. 8 சதவிகிதத்தினரும், நீரில் மூழ்கி 7.7 சதவிகிதத்தினரும் மற்றும் தீ விபத்துகளில் 7 சதவிகிதத்தினரும் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications