தெலுங்கானா விவாகரம்: டிஆர்எஸ், பாஜக சாலைமறியல் - நூற்றுக்கணக்கானோர் கைது
ஹைதராபாத்: தெலுங்கானாவை தனிமாநிலமாக்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இப்போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சி, பாஜக உள்ளிட்ட தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெலுங்கானா பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் 9 மாவட்டங்களில் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் பல கிமீ தூரம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கூட்டுப் போராட்டக் குழுத் தலைவர் கோதண்டராமன், பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா, டிஆர்எஸ் தலைவர்கள், தொண்டர்கள் ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முடக்கியபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் ஜெய் தெலுங்கானா என்று கோஷம் எழுப்பிக் கொண்டு கட்சிக் கொடிகளுடன் சாலைகளை மறித்தனர்.
இந்த அரசு போலீசைக் கொண்டு எங்களுக்கு போராடும் உரிமையை மறுக்கிறது என்று கோதண்டராமன் தெரிவித்தார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டுபோய் வேனில் ஏற்றினர்.
ஹைதராபாத்தின் முக்கிய இடமான ஆர்டிசி குறுக்குச் சாலைகளில் டிஆர்எஸ் தலைவர் என். நரசிம்ம ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அவர்களை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.
டிஆர்எஸ் எம்எல்ஏ ஹரிஷ் ராவ் மேதக் மாவட்டத்தில் உள்ள சித்திபெட்டில் போராட்டத்தில் குதி்த்தார். ஹைதராபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்துகள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் நெடுந்தூரத்திற்கு நின்றன. பொறுமையை இழந்த மக்கள் சாலையிலேயே சமைத்து சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.
கரிம்நகர், வாரங்கல், ஆதிலாப்த், நிஜாமாபாத், ரங்கா ரெட்டி, நல்கொண்டா, மஹபூப்நகர் மற்றும் இதர மாவட்டங்களில் தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு மாணவர்கள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடக்கிறது.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் 5வது பரிந்துரையை ஏற்று தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் உள்ளிட்ட தெலுங்கானா ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ளன.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications