பெட்ரோல் விலை உயர்வு-பார்வர்ட் பிளாக் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2. 54 உயர்ந்துள்ளது.

இதற்கு காரணமாக இருக்கின்ற மத்திய அரசின் நடவடிக்கையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

பன்னாட்டு சந்தையில் பெட்ரோல் விலை உயரும் போது அதை காரணம் காட்டும் மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு விலை குறைந்த போது பெட்ரோல் விலையை குறைக்க முன் வரவில்லையே.

விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெறவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பார்வர்ட் பிளாக் இடது சாரி கட்சிகளுடன் இணைந்து பேராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+