தலிபான் தலைவர் முல்லா ஒமருக்கு மாரடைப்பு-கராச்சியில் சிகிச்சை பெற உதவிய ஐஎஸ்ஐ

முல்லா ஒமர் உலகஅளவில் மிக பயங்கரமான தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருபவர். ஆப்கானிஸ்தானில் பிறந்தவரான இவர் தலிபான் அமைப்பின் தலைவர் ஆவார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆண்டு வந்தபோது அதன் தலைவராக இருந்தவர். இவரை அமெரிக்கா வலை வீசி தேடி வருகிறது. ஆனால் இவர் யாரிடமும் சிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், முல்லா ஒமருக்கு கடந்த 7ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் கராச்சி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிகிச்சைக்கு ஐஎஸ்ஐதான் உதவி செய்ததாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
எக்ளிப்ஸ் என்ற ஒரு தனியார் உளவு நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. முன்னாள் சிஐஏ ஏஜென்ட் ஒருவர் நடத்தும் உளவு அமைப்பாகும் இது.
ஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தூதர் ஹூசேன் ஹக்கானி வாஷிங்டனில் கூறுகையில், இது அடிப்படை ஆதாதரமற்ற செய்தி என்றார்.
ஒற்றைக் கண்ணுடன் உலவி வரும் முல்லா ஒமர், பாகிஸ்தான் பகுதியில்தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்பி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications