பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

பாகிஸ்தானின் வட மேற்கில், ஈரான், ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள பாலைவனப்பகுதியில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 7.4 ரிக்டராக இருந்தது.
பூமிக்குக் கீழே 84 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பத்தால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது விரிவாகத் தெரியவில்லை.
இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் வட இந்தியாவிலும் தெரிந்தது. டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்துள்ளனர். டெல்லியில் பல பகுதிகளில் வீடுகளில் உள்ள பொருட்கள் ஆடியதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், பார்மர், கங்காநகர், ஜெய்சால்மர் ஆகிய நகரங்களில் நில அதிர்ச்சி காணப்பட்டது. துபாயிலும் கூட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் 7.6. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications