முதல் கட்ட தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டோம்-தங்கபாலு
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைப்பது உறுதி. முதல் கட்ட தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
திமுகவுடன் கூட்டணி வைப்பதையே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். எனவே இதற்கு மாறாக யாரும் காங்கிரசில் பேசக்கூடாது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004ஆம் ஆண்டை தொடர்ந்து 2009ஆம் ஆண்டிலும் இந்த கூட்டணி வெற்றிகளை குவித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றியை குவிக்கும்.
சட்டமன்ற தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது. இதுதொடர்பாக வரும் 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications