சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற 15 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 17 இயக்கத்தினர் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்தும், இந்த கொடுமையைத் தடுக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்றனர்.

கடந்த 2 வாரத்தில் இலங்கை கடற்படை 2 தமிழக மீனவர்களை கொன்றுள்ளது. மேலும், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்கியும் வருகிறது.

எனவே, மே 17 இயக்கத்தினர் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்றனர்.

இந்த போராட்டம் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் தலைமையில் நடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+