வீரபாண்டி ஆறுமுகம் காரை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் அந்த வழியாக வந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின்காரை சிறைப் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களுக்கும், அமைச்சருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மூண்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், அங்குள்ள ஒரு கல்லூரியின் விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது காரில் வந்தார்.

இதைப் பார்த்த மாணவர்கள் திரண்டு சென்று காரை வழிமறித்து சிறை பிடிப்பது போல நிறுத்தி சூழ்ந்து கொண்டனர். இதனால் கார் போக முடியவில்லை. இதைப் பார்த்த அமைச்சர் டென்ஷனானார். மாணவர்களிடம் வழி விடுமாறு கண்டிப்பு கலந்த குரலில் கூறினார். ஆனால் இதைக் கேட்ட மாணவர்கள் காரைப் போக விட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினர்.

இதையடுத்து அமைச்சருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சட்ட மாணவர்கள் போராட்டம்

இதற்கிடையே, தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர்தொடர்ந்து சுட்டுக் கொன்று வருவதைக் கண்டித்து சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+