புல்மேட்டில் தமிழக பதிவு எண்ணுடன் அனாதையாக கிடந்த பைக்: போலீசார் விசாரணை
பத்தனம்திட்டா: சபரி்மலை புல்மேட்டில் விபத்து நடந்த இடத்தில் அனாதையாக கிடந்த தமிழக பதிவெண் கொண்ட பைக்கின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சபரி்மலையில் மகர ஜோதியை தரிசித்து விட்டு திரும்பும் போது புல்மேட்டில் நடந்த விபத்தில் சிக்கி 107 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து கேரள குற்றப்பிரிவு எஸ்பி சுரேந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்பிரிவு டிஎஸ்பி விஜயன் உள்ளிட்ட போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்தில் தமிழக பதிவெண் கொண்ட பைக் ஒன்று அனாதையாகக் கிடந்தது. அதன் உரிமையாளர் யார் என்பதை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பைக் உரிமையாளரை கண்டுபிடிக்க எஸ்ஐ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. புல்மேடு விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களிடமும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். விபத்தில் பலியான பக்தர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வண்டி பெரியார் பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து பணம், ஏராளமான செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications