ரூ. 17,500 கோடியில் 6 மாநிலங்களில் 7 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

Mumbai
மும்பை: மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ரூ. 17,500 கோடி செலவில் 6 புதிய அதி நவீன நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடியரசு தின பரிசாக இந்தத் திட்டத்தை அறிவிக்கிறது மத்திய அரசு.

இதுகுறித்து மத்திய தொழில் வர்த்தக அமைசத்சகத்தின் இணைச் செயலாளர் தல்லீன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இத்திட்டத்தின்படி மகாராஷ்டிராவில் 2 நகரங்கள் உருவாக்கப்படும். ஹரியானா, உ.பி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் தலா ஒரு நகரம் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 17,500 கோடி செலவிடப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நகரங்கள் உருவாக்கப்படும்.

ஒவ்வொரு நகருக்கும் ரூ. 2500 கோடி செலவிடப்படும். இந்த புதிய நகரங்களில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உருவாக்கப்படும். அதி நவீன அடிப்படைக் கட்டமைப்புகள் இங்கு இடம் பெற்றிருக்கும்.

நாடு முழுவதும் அடுத்த 30 வருடங்களில் 24 நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக புதிய நகரங்கள் உருவாக்கப்படவுள்ளன.

புதிதாக உருவாக்கப்படும் நகரங்கள் அனைத்தும் டெல்லி-மும்பை தொழிற் பாதையில் அமையவுள்ளன.

2030ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 59 கோடி பேராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2030ம் ஆண்டில் இந்தியாவில் 68 மேம்படுத்தப்பட்ட நகரங்கள் இருக்கும். அந்த நகரங்களில் மொத்தமாக 10 கோடி பேர் வசிப்பார்கள்.

நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 70 சதவீதம் இந்த நகரங்களில் இருக்கும். நாட்டின் ஜிடிபியில் 70 சதவீதத்தை இந்த நகரங்களே பங்களிக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+