லால் சவுக்கில் கொடியேற்ற நிகழ்ச்சி-பாஜகவினர் கைது
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர், லால் சவுக்கில் தேசியக் கொடியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட பாஜகவினர் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால் அதை மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இணைந்து முறியடித்து விட்டன.
பாஜகவினரின் முயற்சி பலிக்காத வகையில், ஸ்ரீநகர் எல்லை முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் லால் சவுக்கை நோக்கி தேசியக் கொடியேற்றுடன் வந்த பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். 15 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில் இவர்கள் திடீரென மெளலானா ஆசாத் சாலையில், தோன்றி விறுவிறுவென லால் சவுக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கைகளில் தேசியக் கொடியுடனும், கோஷமிட்டபடியும் இவர்கள் சென்றனர். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூத்த பாஜக துணைத் தலைவர் சோபி யூசுப்பும் ஒருவர்.












Click it and Unblock the Notifications