கூடுதல் கலெக்டர் சோனாவானே கொலை வழக்கில் 7 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மாலேகான்: நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட கலெக்டரை உயருடன் எரித்துக் கொன்றவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டு மன்மத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது,

முக்கிய குற்றவாளியான போபட் தத்து ஷின்டே, அவரது மைத்துனன் சீதாராம் பாலிராவ், ராஜு ஷிர்சத், கசரு சுரோடே, விகாஸ் ஷின்டே, தீபக் பொராசே, தௌசிப் ஷைக் அல்தாப் ஷைக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு குற்றவாளியான ஷின்டேவின் மகன் குனால் தலைமறைவாக உள்ளான் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மன்மத் அருகே உள்ள பானேவாடியில் ஷின்டேயும், அவரது ஆட்களும் சேர்ந்து சோனாவானே மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

கடந்த 2006, 2008ல் ஷின்டே மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு முறை அவர் மன்மத் நகர எல்லையை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+