சரியும் காங்கிரஸ், வளரும் ஆர்.எஸ்.எஸ்.-இந்து முன்னணி தலைவர் ராம.கோபலன் பேட்டி
திருச்சி: காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லாதாதல் தான் இமாலய ஊழல்கள் எல்லாம் நடைபெற்றுள்ளது என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து திருச்சியில் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அறநிலையத் துறையில் ஊழல் மலிந்து விட்டது. ஆயிரக்கணக்கான கோயில்களில் உள்ள உற்சவர் சிலைகள் சிறை வைக்கப்பட்டுகின்றன. மேலும் பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் செம்பு சிலைகளாக மாற்றம் செய்யப்படுகிறது. கோயில் நிலங்கள் விற்கப்படுகிறது.
இந்து கோயில்களில் தண்டனை போல கட்டணம் வசூல் செய்கின்றனர். இது போன்று கோயில்களில் அரசு மேற்கொள்ளும் அத்துமீறல்களை கண்டித்தும், கோயிலை விட்டு அரசை வெளியேற வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்கள், ஒன்றிய அளவில் இந்து முன்னணி சார்பில் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
காங்கிரஸ் கட்சி இந்து இயக்கங்கள் மீது கடுமையான கருத்துக்களை கூறி வருகிறது. இதனால் அக்கட்சி பல சரிவுகளை சந்தித்து வருகிறது. மாறாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இந்துக்களை குறைகூறி பேசினால் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை பற்றி ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் தட்டி எடுத்துக் கூறுவோம்.
காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லாதாதல் தான் இமாலய ஊழல்கள் எல்லாம் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல் பொருட்களின் விலைகளை ஏற்றியுள்ளது. இதில் இருந்து காங்கிரஸ் ஆட்சியின் லட்சணம் மக்களுக்கு புரியும்.
இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. தரமற்ற பொருட்களை இந்தியாவுக்குள் அனுப்பி, நமது பொருளாதாரத்தை சீனா சீர்குலைக்க முயற்சிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications