அமெரிக்காவுக்கு திடீரென கிளம்பிப் போன ராஜபக்சே திரும்பி வந்தார்
கொழும்பு: அமெரிக்காவுக்கு திடுதிப்பென கிளம்பிச் சென்ற இலங்கை சர்வாதிகாரி மகிந்தா ராஜபக்சே இன்று கொழும்பு திரும்பி விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 18ம் தேதி திடீரென அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போனார் ராஜபக்சே. ஹூஸ்டனில் அவர் தங்கியிருந்தார். தனிப்பட்ட பயணம் இது என்றனர் இதை. ஜோசியக்காரர்கள் நேரம் சரியில்லை, நாட்டை விட்டு வெளியே சில நாட்கள் இருந்தால் நல்லது என்று கூறியதால் ராஜபக்சே அமெரிக்காவுக்கு ஓடியதாக செய்திகள் கூறின.
அதேசமயம், ராஜபக்சேவுக்கு புற்றுநோய் வந்திருக்கிறது. இதற்காக அவர் ஹூஸ்டனில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றும் செய்திகள் கூறின.
ராஜபக்சே எதற்காக அமெரிக்கா போனார் என்பதை அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கேட்டன. ஆனால் அரசுத் தரப்பு எதற்கும் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், ராஜபக்சே மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அமெரிக்கர்கள் அமைப்புகள் திரண்டு சென்று அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தன. இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பு தமிழ் அமைப்புகள் இதுபோல அதிபரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த வாய்ப்பு, அதுவும் அதிபரையே சந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தற்போது ராஜபக்சே அமெரிக்காவுக்கு வந்துள்ளதால், அவர் மீதான போர்க்குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று ஒபாமாவை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன.
இந்த நிலையில் திடீரென இன்று கொழும்பு திரும்பி விட்டார் ராஜபக்சே. அதிகாலையில் அவர் கொழும்புக்கு வந்து சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் துரத்தப்பட்டதைப் போன்ற நிலை அமெரிக்காவிலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்தான் ராஜபக்சே ஓடி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
வருங்காலத்தில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் சுதந்திரமாக போக முடியாத அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கடிகள் முற்றி வருவதாக ராஜபக்சே எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications