ஊதர்ஷ் வீட்டு வசதி ஊழல்-குற்றம் சாட்டப்பட்டோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேற்றுதான் ஆதர்ஷ் சொசைட்டி வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து இன்று அதிரடி ரெய்டில் அது இறங்கியது.
சொசைட்டியின் பொதுச் செயலாளர் ஆர்.சி.தாக்கூர், ஓய்வு பெற்ற பிரிகேடியர் வன்சூ, காங்கிரஸ் தலைவர் கே.எல்.கித்வானி ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் இந்த ரெய்டு நடந்தது. மகாராஷ்டிரா, பிகாரில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டன.
மும்பை, கொலாபாவில் அமைந்துள்ள ஆதர்ஷ் சொசைட்டி அலுவலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.
நேற்று சிபிஐ பதிவு செய்த வழக்கில் 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் பெயரும் அடக்கம். இருப்பினும் குற்றவாளியாக அசோக் சவான் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications