ஐஎஸ்ஐ தொடர்பு: ராணுவ கேப்டன் கைது - ஹவாலாவிலும் பங்கு
Subscribe to Oneindia Tamil
சன்டிகர்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருக்கும் ராணுவ கேப்டன் இன்று சந்தமந்தர் கண்டோன்மென்ட் அருகே கைது செய்யப்பட்டார்.
ஹவாலா மற்றும் ஐஎஸ்ஐ உடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்க கேப்டன் ஷியாம் சுந்தர் ராம் இன்று கைது செய்யப்பட்டார். ஆனால் ராணுவ அதிகாரிகள் இந்த வழக்கு குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லா மற்றும் மாண்டியில் ஹவாலாவில் தொடர்புடைய அமரிக் சிங் மற்றும் பகவான் தாஸ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு தான் இன்று கேப்டனை கைது செய்தனர். ஷியாம் சுந்தர் ராமை ஹிமாச்சல் போலீசாரிடம் ஒப்படைக்கப்போவதாக சன்டிகர் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications