சிஏஜி அறிக்கையை வைத்து 2ஜி உரிமங்களை ரத்து செய்ய முடியாது-சுப்ரீம் கோர்ட்

ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கலில் மோசடி நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அனைத்து 2ஜி உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பொது நலன் மனுக்களுக்கான மையம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிஏஜி அறிக்கை அடிப்படையில் உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒருவேளை உரிமங்களை ரத்து செய்வதாக இருந்தாலும் கூட அதை சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 1ம் தேதி வரைக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், உரிமங்கள் தொடர்பான மத்திய அரசின் எந்த முடிவும், இந்த வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications