உபியில் 10 பேப்பர் மில்களில் ரெய்டு: 25 டைஜெஸ்டர் எந்திரங்களுக்கு சீல்

Subscribe to Oneindia Tamil

முசாபர்நகர்: மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று உத்தர பிரதேசத்தில் உள்ள 10 பேப்பர் மில்களில் அதிரடி சோதனை நடத்தி 25 டைஜெஸ்டர் எந்திரங்களுக்கு சீல் வைத்தனர். அந்த மிலக்ள் அம்மாநில அரசு உத்தரவை மீறி டைஜெஸ்டர் எந்திரங்களை பயன்படுத்தி வந்தன.

காகிதத் தயாரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் டைஜெஸ்டர் என்ற இயந்திரங்களின் மூலம் வெளியாகும் கழிவுகள் கங்கை நதியில் கலப்பதைத் தடுக்கும் வகையில், அதற்கு உ.பி. அரசு தடை விதித்திருந்தது. குறிப்பாக, தற்போது அலகாபாத்தில் நடந்து வரும் மாக் மேளா முடியும் வரை இதைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்திருந்தது.

ஆனால் அரசு உத்தரவை மீறி டைஜெஸ்டர்களைப் பயன்படுத்தி வந்த 10 பேப்பர் மிலக்ளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிறகு அங்கிருந்த 25 டைஜெஸ்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து துணை மாசு கட்டப்பாட்டு அதிகாரி சுனில் குமார் கூறியதாவது,

இந்த குழு 10-க்கும் அதிகமான பேப்பர் மில்களில் சோதனை நடத்தியது. அப்போது அவர்கள் டைஜெஸ்டர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேப்பர் மிலக்ளில் இருந்த 25 டைஜெஸ்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இது அலகாபாத்தில் நடக்கும் மாக் மேளாவையொட்டி அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

கடந்த 15-ம் தேதி துவங்கிய மாக் மேளா வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+