புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணியுடன் அதிமுக 'சீட்' பேச்சு
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக புதிய தமிழகம் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுடன் அதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியது அதிமுக.
இந்த நிலையில் நேற்று புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.
அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும், புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, அய்யர், பாஸ்கர் மதுரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. குழுவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றது. இனி அடுத்தடுத்து பேச இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.
இதேபோல மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சேதுராமன், இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசி தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications