ராசா கைதால் கூட்டணி பாதிக்காது-திமுக, காங். திட்டவட்டம்
டெல்லி: முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டது, திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணியைப் பாதிக்காது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கடி தருவதற்காகவே ராசா மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பாக முனுமுனுக்கப்படுகிறது.
ராசா கைது விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில்,
இது சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி. அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. சட்டம் தனது கடமையை செய்யும் என்று ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கூறி வருகிறது.
இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றார்.
அதே போல இந்தக் கைதால் காங்கிரசுடனான உறவில் எந்தப் பிரச்சனையும் வராது என்று திமுக அறிவித்துள்ளது.
இது ரொம்பத் தாமதம்-சாமி:
ராசா கைது குறித்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில், இது மிக மிக தாமதமான நடவடிக்கை. முன்பே இதை செய்திருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் கொடுத்து வரும் நெருக்குதல் காரணமாகவே இப்போது கைது செய்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications