ராசா மட்டும் ஊழல் பணத்தை விழுங்கவில்லை-பாஜக கருத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா மட்டும் ஊழல் பணத்தை விழுங்கவில்லை. மற்றவர்களையும் நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதார் ரூடி கூறுகையில், இது மிகவும் தாமதமான நடவடிக்கை. மிகவும் சிறிய அளவிலான நடவடிக்கை.
ராசா மட்டுமே ரூ. 1.76 லட்சம் கோடியையும் சாப்பிட்டார் என்று கூறுவது நியாயமற்றது. இதன் பின்னணியில் உள்ள மற்றவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். அதை அறிய பாஜக விரும்புகிறது.
ராசாவின் கைது ஒரு ஆரம்பம்தான். இந்தக் கைதுக்காக அரசை யாரும் பாராட்டாதீர்கள். இந்த வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பு நிறைய கேள்விகளுக்கு அரசு இன்னும் பதிலளிக்க வேண்டியுள்ளது என்றார் ரூடி.












Click it and Unblock the Notifications