ட்விட்டரில் எனக்கு கணக்கு இல்லை-போலி செய்திகள் வெளியாகின்றன: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டர் தளத்தில் எனக்கு கணக்கு எதுவும் இல்லை. நான் அதில் எழுதுவதும் இல்லை. ஆனால் எனது பெயரில் போலியான தகவல்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சமுதாய நெட்வொர்க் இணையத்தளமான ட்விட்டர் இணையத் தளத்தில் என்னுடைய பெயரில் நான் எழுதுவது போல தகவல்கள் வெளியாவதாக என் கவனத்துக்கு வந்துள்ளது. ட்விட்டர் இணையத் தளத்தில் நான் எதுவும் எழுதுவதில்லை என்பதை தெளிவுபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திட்டமிட்டு யாரோ ஆள் மாறாட்டம் செய்து, என் பெயரில் ட்விட்டரில் எழுதுகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம். என் பெயரில் ட்விட்டரில் எழுதுபவர்கள் மீது காவல் துறை சைபர்- கிரைம் பிரிவு மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.

எனவே ட்விட்டரில் எனது பெயரில் வரும் தகவல்களை எனது நண்பர்கள், கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள், தோழமை கட்சியினர் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+