ராசாவிடம் சி.பி.ஐ. இரவு-பகலாக தீவிர விசாரணை!

இந்த விவகாரத்தில் ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகிய மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் முவரையும் 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார் நீதிபதி.
இதையடுத்து ஆ.ராசா, பெகுரியா, சந்தோலியா மூவரையும் அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று 2வது மாடியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உடனடியாக சி.பி.ஐ. மூவரிடமும் விசாரணை தொடங்கியது.
இரவு வரை இந்த விசாரணை நீடித்தது. நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தூங்க அனுமதித்தனர்.
சி.பி.ஐ. தலைமை அலுவலக 2 ராசா, பெகுரா, சந்தோலியா மூவரும் தூங்குவதற்கு தனித் தனி அறைகள் கொடுக்கப்பட்டன. ராசாவின் டெல்லி வீட்டில் இருந்து அவருக்கு உணவு எடுத்து வரப்படுகிறது.
மேலும் ராசாவுக்கு படுக்கை விரிப்புகள், போர்வைகளை அவர் வீட்டில் இருந்து உறவினர்கள் எடுத்து வந்தனர்.
இன்று காலை ராசா, பெகுரா, சந்தோலியா மூவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகளே உணவு வழங்கினர். அதன் பிறகு உடனடியாக விசாரணை தொடங்கியது. மூவரும் தனித் தனி அறைகளில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
பின்னர் மூவரையும் ஒன்றாக அமர வைத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராசாவிடம் வாக்குமூலம் கொடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
8ம் தேதி பிற்பகல் மூவரும் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications