அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமா?: விண்ணப்பம் விலை ரூ.10,000!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை, உரிய கட்டண தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வரும் 18ம் தேதி பிற்பகல் 2 மணி வரை விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

கட்டணம் ரூ.10,000:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் அ.தி.மு.க. கட்சியினர், தலைமை கழகத்தால் வழங்கப்படும் உரிய விண்ணப்பப் படிவங்களை மட்டுமே பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000மும், புதுச்சேரியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.5,000மும், கேரளத்தில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ. 1,000மும் கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+