வள்ளியூரில் கட்டப்பஞ்சாயத்து பார்ட்டிகளுக்கு வலை! - நெல்லை எஸ்.பி. அதிரடி
வள்ளியூர்: நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரியின் நேரடி பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் வள்ளியூரில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டி வருகின்றனர். இது தவிர ரவுடிகள் பட்டியலும் தயாரிக்கப்படுவதால் பெரும்புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கட்டப்பஞ்சாயத்து, நிலமோசடி, கந்து வட்டி கொடுமை, சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பு, பெண்களிடம் செயின் பறிப்பு, தொடர் கொள்ளை போன்றவற்றை சமூக விரோதிகள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி வள்ளியூரில் முகாமிட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில் வள்ளியூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதை அறிந்து நேற்று இரவு முதல் ஆயுதப்படை, சிறப்பு படை, போக்குவரத்து போலீசார் உட்பட சுமார் 75க்கும் அதிகமான போலீசாரை வள்ளியூரில் ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள காமராஜர் நகர், அம்பேத்கார் நகர், ராதாபுரம் ரோடு, முருகன் கோவில்பாதை, கோட்டையடி விலக்கு, புறநகர் பகுதியான இபி காலனி, நல்லசமாரிடன் நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 போலீசார் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications