இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்
மதுரை: இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி நாளை (பிப்ரவரி 8-ம் தேதி) சட்டப் பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.
பொதுத் துறை நிறுவனத்திற்கு சொந்தமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.
இந்த தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு 1987-க்கு பிறகு வழங்கப்படாத ஊதிய உயர்வை உடனே வழங்க மேண்டும் என்றும் வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், அதிகாரிகள் சங்கம் சார்பில் எச்.பி.எப். பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி 28-ம் தேதி அன்று உதகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பேரணி நடத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 3-ம் தேதி அன்று தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கும் அரசு செவிசாய்க்காதாதல் நாளை (பிப்ரவரி 8 ம் தேதி) சென்னையில் சட்டப் பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக எச்.பி.எப். பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications