சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மைகளை எரிக்கும் திமுகவினர்
சென்னை: முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கோரி கவர்னரிடம் மனு தந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியின் உருவப் பொம்மைகளை திமுகவினர் எரித்து வருகின்றனர்.
தமிழக வீட்டுவசதி வாரியத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் மனைகள் ஒதுக்கியதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் பர்னாலாவிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று முன் தினம் மனு கொடுத்தார்.
இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார். இந் நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மையை எரித்து வருகின்றனர்.
நேற்று பட்டுக்கோட்டையில் சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மை எரிக்கப்பட்டது. இன்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டம் திமுக துணைசெயலாளரும், நகர சேர்மனுமான கார்த்திக் தலைமையில் திரண்ட திமுகவினர் சாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அவரது உருவப் பொம்மையை எரித்தனர்.
அதே போல பட்டுக்கோட்டை, கரூர், திருவாரூர், மதுரை, திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உருவப் மொம்மைகளை எரித்தனர்.
அதே போல நெல்லையில் டவுன் சந்திப்பிள்ளையார் கோயில் அருகே திமுகவினர் சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்துவிட்டனர்.
அதே போல தமிழகம் முழுவதும் சாமியின் உருவப் மொம்மையை திமுகவினர் முயன்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications