சங்கரராமன் கொலை வழக்கு: மேலும் 2 சாட்சிகள் பல்டி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சாட்சிகள் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி ராமசாமி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று 2வது நாளாக சாட்சிகள் விசாரணை நடந்தது.
வழக்கு தொடர்பாக ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 8 பேர் நேற்று ஆஜராயினர். ஆனால், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 17 பேர் ஆஜராகவில்லை.
ஆடிட்டர் நாகராஜ், இந்தியன் வங்கி மேலாளர் நாகராஜன், ஆந்திரா வங்கி மேலாளர்கள் சரவணகுமார், முகுந்தன், ராமச்சந்திரன், வெங்கடேசன், மகாராஜன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இவர்களில் வெங்கடேசன், மகாராஜன் ஆகியோர் முன்னர் அளித்த சாட்சியத்தை மாற்றி பல்டி அடித்தனர்.
இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடக்கவுள்ளது. இந்த கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications