சட்டசபை வளாகத்தில் கள் விற்க முயன்ற கள் இயக்கத்தினர் 9 பேர் கைது
சென்னை: கள் இயக்கம் சார்பில் இன்று சட்டசபையில் கள் விற்பனை செய்ய முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கள் இயக்கத்தினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் கள் இறக்கவும், குடிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். பூரண மது விலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதுவரை, டாஸ்மாக் மதுக்கடை, பனை தென்னை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்க வேண்டும். அவற்றை உள்நாட்டிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் விற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர்.
இன்று சட்டசபை வளாகத்தில் யாருக்கும் தொந்தரவின்றி கள் விற்பனை செய்யப்படும் என்று கள் இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று எழுமபூரில் உள்ள ஒரு ஹோட்டல் முன் இருந்து ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கதிரேசன், முருகன், சிதம்பரம் உள்பட் நிர்வாகிகள்கள் பாட்டில், பனை ஓலை பட்டையுடன் சட்டசபைக்கு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் சென்றுக் கொண்டிருக்கையிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், நல்லசாமி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications